search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள்"

    • கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
    • மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாண வியர்களுக்கிடையே நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய போது கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போ ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயி ரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சிறப்பு பரிசாக தலா 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு ப்போட்டி மற்றும் கட்டு ரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில், கலைஞர் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பேயன்குழி அரசு உயர்நி லைப்பள்ளி மாணவி ஹரிசபரிஷா முதல் பரிசும், நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் லீனஸ்ஷேரன் 2-ம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனா 3-ம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீமதி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பபினாசெர்லின் ஆகி யோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்துக்கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா முதல் பரிசும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, 2-ம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விஜித்ரா மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை ப்போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்ம அக் ஷயா 2-ம் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவபிரியா, 3-ம் இடத்தை பெற்றார்கள்.

    பேச்சுப்போட்டிகளில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷ்மி முதல் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகைனா பாத்திமா 2-ம் இடத்தையும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா மூன்றாம் பரிசும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டி களில் பரிசு பெற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரி வித்துக்கொள்வதோடு, இதுபோன்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நிக ழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெ க்டர் (ச.பா.தி) திருப்பதி, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • உணவை 40 நிமிடங்களில் 56 வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
    • டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாளை (செப்டம்பர் 17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரத்யேக உணவு தட்டு வழங்கப்படுகிறது. இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து உணவக உரிமையாளர் சுமித் கல்ரா பேசியதாவது:-

    பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் நம் நாட்டின் பெருமைக்குரியவர். அவருடைய பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை அவருக்குப் பரிசளிக்க விரும்புகிறோம். அதனால்தான் இந்த பிரமாண்ட தாலியை வெளியிட முடிவு செய்தோம். அதற்கு 56 இன்ச் மோடி ஜி தாலி என்று பெயரிட்டோம்.

    இதனுடன், நாங்கள் அவருக்கு இந்த தட்டை பரிசளிக்க விரும்புகிறோம், அவர் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதை செய்ய முடியாது. எனவே அவரை மிகவும் நேசிக்கும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த தட்டில் வந்து மகிழுங்கள். இந்த சிறப்பு தாலி வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் அளிக்கும்.

    இதற்காக வெகுமதியை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். யாராவது 40 நிமிடங்களில் இந்த பிளேட்டை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.8.5 லட்சம் பரிசாக வழங்குகிறோம்.

    மேலும், செப்டம்பர் 17 முதல் 26 வரை எங்களிடம் இந்த உணவை சாப்பிடுபவர்கள், அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் கேதார்நாத்தை தரிசிக்க டிக்கெட் பெறுவார்கள். ஏனெனில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    கோவில்பட்டி:

    முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.

    விழாவில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம் தலைமையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாமன்னர் பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, பகத்சிங் ரத்ததானக் கழக அறக்கட்டளை நிறுவனர் காளிதாஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தொழிலதிபர் அங்கமுத்து, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், இன்னர்வீல் கிளப் பட்டயத் தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா, உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலர் முத்துச்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தாவீதுராஜா, அ.தி.மு.க. ஒன்றியச் செயலர் அன்புராஜ், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சமூகவலை தளங்களில் மாணவி ஒருவர் தான் மது விருந்தில் பங்கேற்று தவறு செய்து விட்டதாக கண்ணீர் மல்க வெளியிட்ட ஆடியோ
    • பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை தாக்கிய அவரது முன்னாள் காதலனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் குளச்சல் அருகே பங்களா வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அங்கு கேளிக்கை என்ற பெயரில் மது விருந்து, காதல் ஜோடிகள் களியா ட்டம் போன்ற கலா சார சீரழிவுகள் இடம் பெற்றது தான்.

    பிறந்த நாள் கொண்டா ட்டத்தின் போது மாணவி அவரது பள்ளித் தோழனால் தாக்கப்பட்டதாக வந்த புகாரை விசாரித்தபோது தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் சமூகவலை தளங்களில் மாணவி ஒருவர் தான் மது விருந்தில் பங்கேற்று தவறு செய்து விட்டதாக கண்ணீர் மல்க வெளியிட்ட ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கும் விதமாக செல்போனில் கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் என குறுந்தகவல் அடிக்கடி வருவதாகவும் அந்த மாணவி ஆடியோவில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை கள்அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் விருந்து நடைபெற்ற பங்களாவை பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    மது விருந்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை தாக்கிய அவரது முன்னாள் காதலனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலை மறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் காதலரான அஸ்வின் அபினேஷ் (வயது 24) என்பவரை குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, பார்வதிபுரத்தில் கைது செய்தார். அவரை குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • அரசு பள்ளியில் காமராஜ் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • வேட்டி, சட்டை, துண்டு மாணவர்கள் அணிந்து வந்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது.

    காமராஜர் படத்திற்கு தலைமை ஆசிரியர் கோ.மூர்த்தி மாலை அணிவித்து, மரியாதை செலுத்த் தினர். காமராஜர் பற்றிய பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் காமராஜரின் சாதனைகளை எடுத்துரைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன. இடைநிலை ஆசிரியர் ரேவதி சுதாதேவி, சத்யப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் வேட்டி, சட்டை, துண்டு காமராஜரின் முகமூடி (மாஸ்க்) அணிந்து வந்து கலந்து கொண்டிருந்தனர்.

    கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி வேட்டி, சட்டை, துண்டு, 

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.
    • இதில் 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.

    ஓவியம், மாறுவேட போட்டிகள் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலை பள்ளிலும், மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியிலும் கட்டுரை போட்டியும், ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது.

    இதில் சாத்தான்குளத்தில் உள்ள 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    போட்டிக்கான ஏற்பாடுகளை ஜான்ராஜா, ராஜேஷ், வேணுகோபால், நேசக்குமார், சுடலைமணி,அருண்குமார், ஏசா,விஜேந்திர பாண்டியன், ஜெபாஸ் ,முத்து சோபன், கண்ணன், முத்துவேல், பாலா , ஆசிர்வாதம் ஆகியோர் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர உங்களின் சாதனை நம்பிக்கையை அளிக்கிறது.
    • சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு முக்கிய தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இணையற்ற சாதனை, எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் ஏராளமான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கை அளிக்கிறது.

    எங்கள் சொந்த சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஆட்டுக்குட்டிகள், தையல் எந்திரம் மற்றும் அரிசி பைகள் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 100 பேருக்கு ஆடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

    கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு 100 பேருக்கு ஆட்டுக்குட்டிகள், தையல் எந்திரம் மற்றும் அரிசி பைகளை வழங்கினார்.

    கன்னியாகுமரி மாவட்ட இயக்க நிர்வாகிகள் விசுவை சந்திரன், ஸ்ரீ ரெங்கநாயகி, கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
    • தெற்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் நடந்தது

    திருப்பரங்குன்றம்,

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட காங்கி ரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். பகுதி தலைவர் நாகேஸ்வரன், அமைப்பு சாரா தொழிலாளர் பணியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன். மகாலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பகவான், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பூபதி பாண்டியன், ராமகிருஷ்ணன், சீனிவாசன், செல்வராஜ், சின்ன தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கக்கனின் எளிமை, நேர்மை பற்றி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் பேசினார்.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. சங்கரன்கோவில் தியேட்டர் சாலையில் அமைந்துள்ள அம்பேத்காரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நகர காங்கிரஸ் பொருளாளர் வைத்தியர் மனோகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நிர்வாகி சித்திரைகண்ணு, அந்தோணி, ராஜேந்திரன், சங்கர மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் கக்கனின் எளிமை நேர்மை பற்றி பேசினார்.

    இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பீர்முகமது, சங்கரன் ஏட்டையா, ரஷீத், தங்கராஜ், கருப்பசாமி, முருகன், ஆறுமுகம், மாடகண்ணு, சமுதாய நாட்டாண்மை சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×